×

அம்பேத்கர் பிறந்த நாள் விழா

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே அம்பேத்கரின் 134வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் ஊராட்சியில் சட்டமேதை அம்பேத்கரின் 134ம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

மேற்கு மாவட்ட விசிக சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கி கேக் வெட்டி அங்கிருந்த குழந்தைகளுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து பழங்குடியின மக்கள் 100 பேருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கிய அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி செயலாளர் பேரறிவாளன், ஒன்றிய செயலாளர் தயாநிதி மற்றும் நிர்வாகிகள் ஆதித்தமிழன், சிற்றம்பலம், சந்தோஷ், ராஜாராமன், விக்டர், ராஜ செல்வம், ராஜவேல், அமலிதிரேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆதிலட்சுமி கோவிந்தராஜ், அன்புராஜ், ஜோதி, சம்பத், முத்தம்மாள் ஆறுமுகம், சிவமயம், ஒன்றிய கவுன்சிலர் மேகலா வெங்கடேசன் மற்றும் விசிக தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

The post அம்பேத்கர் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Achirupakkam ,Chattamedha Ambedkar ,Elappakkam ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை